எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை நடைபெற்றது

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்றது.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூரில், வருகிற 21ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக
ஆத்தூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Exit mobile version