செஞ்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா: அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

செஞ்சி ஒன்றியம் சார்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மழவந்தங்கல் ஊராட்சியில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின், 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், செஞ்சி ஒன்றிய அதிமுக  செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினருமான கோவிந்தசாமி  தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி .சண்முகம், உழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வர முடியும் என்று தெரிவித்தார்.

Exit mobile version