எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் – அதிமுக

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா ஜனவரி 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version