எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு நாள்: நினைவிடத்தில் குவியும் அதிமுகவினர்

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Exit mobile version