மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஜூலை மாதம் 23-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டது. நீர்திறப்பின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் நீர் திறப்பு நிறுத்தப்பட வேண்டிய நிலையில், கூடுதலாக நீர்திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர், மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version