மேட்டூர் : மேலும் 2 கால்வாய்கள் திறப்பு!

மேட்டூர் அணையிலிருந்து , புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசனத்திற்கு வரும் 18 ம் தேதி முதல்136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து , புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு , திருச்சி , தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட வேளாண் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து , வரும் புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 18 தேதி முதல் டிசம்பர் 31 வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திருச்சி , தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி , நீர் மேலாண்மை மேற்கொண்டு , உயர் மகசூல் பெற வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version