வாக்கு எண்ணும் மையத்தில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.

சென்னை அடையாறில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் தெற்கு மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மே 23 ஆம் தேதி இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. இதனால் அந்த வாக்கு எண்ணும் மையம் தொடர் கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சென்னையிலுள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் மத்திய ரிசர்வ் படையினரோடு இணைந்து காவல் துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்துவருவதாகவும், அண்ணா பல்கலை கழக வாக்கு எண்ணும் மையம் 45 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version