பயணிகள் கூட்டத்தால் நிரம்பிய மெட்ரோ ரயில்கள்

சென்னை மெட்ரோ ரயிலில், அனைத்து வழித்தடங்களிலும், இலவச சேவை இன்றும் நீட்டிக்கப்பட்டதால், பயணிகள் கூட்டத்தால் மெட்ரோ ரயில்கள் நிரம்பி வழிந்தன.

திருப்பூரில் கடந்த 10ஆம் தேதியன்று நடைபெற்ற அரசு விழாவின்போது, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து – டி.எம்.எஸ். வரையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மெட்ரோ ரயில் பயணத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில், கடந்த 10ஆம் தேதி மாலை 6 மணி முதல், இன்று இரவு வரை, அனைத்து வழித்தடங்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள், முதியோர் உட்பட, பல தரப்பட்டோரும் மெட்ரோ ரயிலில் பயணித்து பூரிப்படைந்தனர்.

Exit mobile version