இ-பதிவு முறையில் நிலவும் குளறுபடியை தவிர்க்க, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

இ-பதிவு முறையில் நிலவும் குளறுபடியை தவிர்க்க, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான் இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அம்மா திருக்கோவிலில், கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ-பதிவு முறை மிகுந்த குளறுபடியாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை தீவிரமாக இருந்தபோது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்திய இ-பாஸ் முறையில், பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே செல்வது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போது இ-பதிவு முறை தெளிவாக இல்லாததால், மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என கூறினார்.

எனவே, மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டுமென அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version