"பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடி"

பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும்,பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் நல்ல முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், அனைவருக்கும் 21 பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரும்பாலான பைகளில் 5 முதல் 6 பொருட்கள் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குறை கூறும் காட்சிகளை குறிப்பிட்டுள்ள அவர், நியாய விலைக் கடைகளில் வழங்கிய வெல்லம் பாகுபோல் உருகியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, அனைத்துப் பொருட்களும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து நியாய விலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய கடமை அரசுக்குத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருட்களும் நல்ல முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version