பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி கோயில்களில் பொது விருந்து

பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறவுள்ளது.

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகத்தில் உள்ள 313 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுகிறது. சென்னை கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதே போல் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு வழிபாடு செய்கிறார். இதனை தொடர்ந்து, மாநிலத்தின் பிற இடங்களில் அண்ணா நினைவுநாளையொட்டி நடைபெறும், வழிபாடு மற்றும் பொது விருந்தில், மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

Exit mobile version