தமிழக துணை முதல்வர் – நிர்மலா சீதாராமன் சந்திப்பு

புது டில்லியில், தமிழக துணை முதலைமச்சர் ஒ. பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிர்மலா சீதாராமன் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழக நிதி மேலாண்மை மற்றும் தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகள் குறித்த கோரிக்கை மனுவை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார். அப்போது, முதன்மை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Exit mobile version