மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து வைக்கும் இயக்கம் அதிமுக-எஸ்.பி.வேலுமணி

மக்களை பிரச்னைகளை முன்னெடுத்து வைக்கும் இயக்கமாக அண்ணா திமுக செயல்படும் என்று கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாநகர் மாவட்ட அலுவலகத்தில், கழக அமைப்பு தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைப்பு தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து மாவட்ட தேர்தல் ஆணையாளர்களுக்கு, தேர்தல் பொறுப்பாளரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு உள்பட பேரூராட்சி, மாநகராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தான் திமுக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version