மீனாட்சி அம்மன் கோவிலில் கொலு கண்காட்சி கோலாகலம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. கொலுச்சாவடியில் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கொலு அரங்கில் அம்மன் இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நவராத்திரியை ஒட்டி தாமரைக் குளம் மற்றும் கோவில் வளாகம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version