மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதனை சார்ந்த கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பணியில், 297 ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 77 லட்சம் ரூபாய் பணம்,  564 கிராம் தங்கம்,  ஆயிரத்து 73 கிராம் வெள்ளி மற்றும் 442 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் காணிக்கைகளாக கிடைத்துள்ளது என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version