விக்கிரவாண்டி அருகே விலையில்லா கறவைப் பசுக்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வேலியந்தல் கிராமத்தில், தமிழக அரசின் விலையில்லா கறவைப் பசுக்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை, மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2018ம் ஆண்டில், பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இம்மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கால்நடைகளுக்குமான மருத்துவ பரிசோதனை முகாம், நாளை வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் இன பெருக்கம் மற்றும் குடற்புழு நீக்க மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

Exit mobile version