பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பொள்ளாச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி, முடநீக்கு கருவி, ஊன்றுகோல்கள், தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

Exit mobile version