தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனை : தமிழகம் தொடர்ந்து முதலிடம்

கொரோனா காலத்தில், வீட்டிலிருந்து தொலைபேசி வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறும் இ சஞ்சீவினி திட்டத்தை பயன்படுத்துவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இ சஞ்சீவினி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செப் 10-ம் தேதி வரை 1 லட்சத்து 549 பேர் பயனடைந்துள்ளனர். இதில், செப் 10 – ஆம் தேதி மட்டும் 1,152 பேர் தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை பெற்று பயன் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 13,181 பேரும், விழுப்புரத்தில் 12,383 பேரும், மதுரையில் 8,634 பேரும் பயனடைந்துள்ளனர். கிருஷ்ணகிரியில் 4,582 பேரும், விருதுநகரில் 4,104 பேரும், ராமநாதபுரத்தில் 4,090 பேரும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளனர். தமிழகத்துக்கு அடுத்தப்படியாக உத்தரபிரதேசத்தில் 70,409 பேரும், கேரளாவில் 29,085 பேரும் இ சஞ்சீவினி திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.

 

இலவச இணையதள மருத்துவம் ‘e-sanjeevani’ – யில் பயனடைவது எப்படி என்பதை வீடியோவில் காணலாம்

Exit mobile version