ஈரோட்டில் மதிமுக நிர்வாகி ஒருவர் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல்

ஈரோடு மதிமுக வேட்பாளருக்கு அதிருப்தி தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது மதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் கணேச மூர்த்தி போட்டியிடுவதை ஏற்காமலும், சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை பொறுக்காமலும் மதிமுக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மதிமுவை சேர்ந்த ஈரோடு மாநகர பொறுப்பு குழு உறுப்பினர் கதிர்வேல், கணேசமூர்த்திக்கு எதிராக சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இது, மதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version