4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 221 பேர் வேட்பு மனுத்தாக்கல்

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 221 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்தது.

அதன்படி, சூலுர் தொகுதியில் 27 பேரும், அரவக்குறிச்சியில் 69 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 52 பேரும், ஓட்டபிடாரத்தில் 29 பேரும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற மே 2 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

Exit mobile version