இடைத்தேர்தல் வெற்றி உண்மைக்குக் கிடைத்த வெற்றி: வாக்காளர்களுக்கு முதல்வர் நன்றி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு வந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொண்டர்களுக்குக் கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி அடைந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவை வெற்றிபெறச் செய்ததற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இரு தொகுதிகளிலும் கிடைத்த வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version