தேர்தல் அதிகாரிகளுடன் மதிமுக வேட்பாளர் வாக்குவாதம்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி, வேட்புமனுத்தாக்கலின் போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். அப்போது, தன்னை காக்க வைத்ததாக கூறி கணேசமூர்த்தி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து கணேஷமூர்த்தி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version