சந்திராயன்-2 சர்வதேச தொழிநுட்பத்தின் முக்கிய மைல்கல் – மயில்சாமி

கட்டுமானத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கட்டுமானத் தொழில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கட்டுமான துறையில் சிறந்து விளங்குவோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அப்போது பேசிய அவர், கூடிய விரைவில் செவ்வாய்க்கோ, நிலவுக்கோ நாம் செல்ல வேண்டிய காலம் வரும் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படுவது சர்வதேச தொழிநுட்பத்தின் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என தெரிவித்தார்.

Exit mobile version