மயிலம் தனிவருவாய் கோட்டமாக மாற்றப்படும் :அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொதுமக்களின் நீண்ட நாள்கோரிக்கையான மயிலத்தை தனிவருவாய் கோட்டமாக மாற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலம் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளாட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்தாலும், தமிழக அரசு நிதி ஒதுக்கி கிராமங்களின் அடிப்படை தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து வருவதாக கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version