புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய அதிமுக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவராக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி நியமிக்கப்படுவதாகவும், மாவட்ட செயலாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.என். விஜயபாலனும், இணை செயலாளராக செல்வராஜ் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளராக வி.ஜி.கே. செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக தலைமை, புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட கழக உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Exit mobile version