மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை : மாயாவதி

மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் தொகுதிகள் கேட்டதால், காங்கிரஸ் கழற்றி விடப்பட்டது.

அதே நேரம் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுவதால், அந்த இரு தொகுதியிலும் தங்களது கூட்டணி போட்டியிடாது என மெகா கூட்டணி அறிவித்தது. இந்நிலையில், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, தற்போதைய சூழலுக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தான் முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

Exit mobile version