மெட்ரிக்குலேசன் பள்ளியில் விதிமீறல் – கோடையில் சிறப்பு வகுப்புகள்

முதுக்குளத்தூர் அருகே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடைகாலத்தில் சிறப்பு வகுப்புகள்எடுக்கும் தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடையில் சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் – செல்வநாயகபுரம் அருகே தனியார் பள்ளியில் ஆங்கில பயிற்சி அளிப்பதாக கூறி, பொதுத்தேர்வு எழுதும் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, மாணவ, மாணவிகளை கோடைகாலத்தில் பள்ளிச் சீருடைகளில் வரவழைத்து, காலை 8 மணி முதல் மாலை 5மணிவரை சிறப்பு வகுப்பு நடத்துவதாக பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி உள்ளனர்.

Exit mobile version