சுதந்திரதினத்தை முன்னிட்டு நடந்த பிரமாண்ட பேரணி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் சுதந்திரதினத்தை முன்னிட்டு 150 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியுடன் மாணவர்கள், பாதுகாப்பு படையினர் என ஏராளமானோர் பங்குபெற்ற பிரமாண்ட பேரணி காண்போரை வெகுவாக கவர்ந்தது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுப்பற்றை வலியுறுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. இதில் 150 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியுடன் சாலையெங்கும் மாணவர்கள், காவல்துறையினர், மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்பட ஏராளமானோர் பங்குபெற்றனர். இந்த பிரமாண்ட பேரணியில், இடம்பெற்ற கலாச்சார நடனத்தை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். இந்த பேரணியில் பங்கு பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், புது அனுபவமாக உள்ளதாகவும் பங்குபெற்றவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version