சைக்கிளில் சென்று கொண்டிருந்த விவசாயி படுகொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஓரியப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர்,அக்கிராமத்தில் உள்ள பொன்ராம் குழி ஏரி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சராமாரியாக தாக்கியதில் ரத்தவெள்ளத்தில் மரணமடைந்தார். தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிபாளர் கென்னடி தலைமையிலான
போலீசார், செல்வரஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version