பென்சன் தொகையை உயர்த்திய தமிழக அரசுக்கு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் நன்றி

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான பென்சன் தொகையை உயர்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சுதந்திரப் போராட்டத் தியாகி பழ.சுப்பிரமணியன் நன்றி தெரிவித்துள்ளர்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான பென்சன் தொகை ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும் என சுதந்திர தின விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குப் பென்சன் தொகையாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படு வந்த நிலையில் தற்போது 1000 ரூபாய் உயர்த்தி வழங்கியதற்குத் தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் முதலமைச்சருக்கு நன்றியுடன் கூடிய பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி முதலமைச்சருக்குத் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Exit mobile version