பள்ளிக் கல்வித்துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி: ஆர்வமுடன் கற்கும் மாணவர்கள்

அரியலூர் மாவட்டம் அனைக்குடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.

அரியலூரில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி தமிழக அரசின் சார்பில் பள்ளி கல்வித்துறை மூலம் இலவச தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைக்குடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். மாணவிகளுக்கு பயிற்றுவிக்கப்படும் தற்காப்பு கலை மூலம் அவர்களை பாதுக்காக்க உதவியாக இருக்குமென தற்காப்புகலை வல்லுநர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version