மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

திருவாரூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு 122 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடைபெற்றது.

திருவாரூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் 122 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

மணமக்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசை பொருட்களையும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், சி. விஜயபாஸ்கர், ஓ.எஸ். மணியன்,  துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டு
மணமக்களை வாழ்த்தினர்.

Exit mobile version