திருமணம் ஆன ஒரே வாரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருமணம் ஆன ஒரே வாரத்தில், பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரிசூலம் லட்சுமணன் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் என்பவரின் மகள் மனிஷாவும், அதே பகுதியை சேர்ந்த ஒட்டுநர் அபின்ராஜும் காதலித்து வந்துள்ளனர். ஒரு வருடமாக இருவரும் தனியாக தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமாணமன ஒரே வாரத்தில், மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரணை செய்து வந்த காவல்துறையினர், அபின் ராஜின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அவர் வேறு ஒரு பெண்ணையும் காதலித்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்த மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக அபின்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version