இலங்கையிலிருந்து மர்ம நபர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக கடல் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 290 பேர் பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இலங்கையிலிருந்து மர்ம நபர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், இலங்கையை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடல் பகுதிகளில் 2வது நாளாக தீவிர பாதுகாப்பு பணியில் கடலோர பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது. இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் முழுவதும், கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக கடலோர காவல் குழும போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version