மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கினர்

கரூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பழைய ஜெயங் கொண்டத்தில் உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி மாவிளக்கு எடுத்தல் , அக்னி சட்டி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிப்பட்டனர்.

Exit mobile version