மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை யொட்டி, திருத்தணி அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகையிலிருந்து, திருத்தணி வரை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version