பொது இடங்களில் ஏற்படும் தீவிபத்து குறித்து மாரத்தான் ஓட்டம்

பொது இடங்களில் ஏற்படும் தீவிபத்துக்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் திடீரென தீவிபத்து ஏற்படும்போது அதை எவ்வாறு அணுக வேண்டும், அதிலிருந்து எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

தனியார் அமைப்பு சார்பில் 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என்ற மூன்று பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Exit mobile version