மதுரையில் மழைநீர்சேகரிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான்

மதுரையில், மழைநீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள முத்துத்தேவர் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு, மற்றும் நிலத்தடி நீர் சேகரிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Exit mobile version