புல்வாமா பாணியில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்

புல்வாமா தாக்குதல் பாணியில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் தாதாபூர் சாலையில் உள்ள குர்கேதா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 கமாண்டோ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14ம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 41 வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது, அதே பாணியில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைத்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் வருவதை முன்கூட்டியே கணித்து வெடிகுண்டுகளை வைத்து தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.

Exit mobile version