தெலங்கானாவில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் பலி

தெலங்கானா வனப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் உயிரிழந்தார்

தெலுங்கானா மாநிலம் கொத்தகூடம் பகுதியில் உள்ள பொடுகுல வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பல குழுக்களாகப் பிரிந்து தங்களை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனப்பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்ட காவலர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரகு என்ற மாவோயிஸ்ட் பலியானார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதியில் இருதரப்புக்கு இடையே சண்டை நடந்ததற்கான தடயங்கள் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், ரகுவை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று போலி என்கவுண்டர் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். 

Exit mobile version