சத்தீஸ்கரில் மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல் – பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 4 பேர் பலி

சத்தீஸ்கரில் நிகழ்ந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தண்டேவடா பகுதியில், பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் கண்ணி வெடித்தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் பலத்த சேதம் அடைந்தது. முன்னால் சென்ற பேருந்தும் தாக்குதலுக்கு ஆளானது.

இதில், பேருந்தில் இருந்து மூன்று பயணிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

சத்தீஸ்கரில் கடந்த ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version