மும்பை ரயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட பாதுகாப்பு படை வீரர்

 

மும்பையில் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற முதியவரை, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை மத்திய ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்றிருந்த முதியவர் ஒருவர், திடீரென தண்டவாளத்தில் இறங்கி சென்றார். ரயில் தண்டவாளத்தை முதியவர் கடந்து செல்வதாக அங்கிருந்த பயணிகள் நினைத்திருந்தனர். அப்போது எதிரே மின்சார ரயில் வருவதை பார்த்த அந்த முதியவர், திடீரென தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் முதியவரை காப்பற்ற கூச்சலிட்டனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர், துணிச்சலுடன் தண்டவாளத்தில் இறங்கி முதியவரை மீட்டார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் முதியவரின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரரை பயணிகள் வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவத்தால் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முதியவரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version