தமிழக அரசின் பெண் பாதுகாப்புக்கான 181 சேவைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள, பெண்களுக்கான 181 சேவைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பெண்களின் பிரச்சினைகளுக்கு உடனடி உதவி கிடைக்கும் வகையில், தமிழக அரசால் 181 என்ற அவசர எண்ணுக்கு அழைக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருப்பதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் நிறுனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, 181 சேவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, இந்த சேவையை தொடங்கிய தமிழக அரசுக்கு கோபிசெட்டிபாளையம் தனியார் நிறுவன பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version