இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிரதமர் மோடி

பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பா.ஜ.க தலைமையிலான அரசு 2வது முறையாக அமைந்து 6 மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் 6 மாதங்களில் இந்தியா என்ற தலைப்பில், தொடர்ச்சியாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 6 மாத காலங்களில் மேம்பட்ட வளர்ச்சிக்காகவும், சமூக அதிகாரமளித்தலை துரிதப்படுத்தவும், இந்தியாவின் ஒற்றுமையை மேம்படுத்தவும் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

370-வது சட்டப்பிரிவுக்கு முற்றுப்புள்ளி முதல் பொருளாதார சீர்திருத்தம் வரை, ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றம் முதல் தீர்மானமான வெளிநாட்டு கொள்கை வரை வரலாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

130 கோடி இந்தியர்களின் ஆசியுடன் வளர்ந்த இந்தியா மற்றும் இந்தியர்களின் மேம்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை முன்னெடுத்து புதுப்பிக்கப்பட்ட வலிமையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும் எனவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version