சென்னையில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

சென்னையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீடு உட்பட பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாடியில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் வசித்து வரும் லீனா நாயர் என்பவர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மே 11ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள், 58 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதே பகுதியில் கடந்த 7ஆம் தேதி பொன்சங்கர் என்பவரின் மளிகை கடையில் புகுந்த மர்ம நபர், 9 ஆயிரம் ரூபாயை திருடிக் கொண்டு மாயமானார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சியை வைத்து, கொள்ளையன் முகமது அபுபக்கர் சித்திக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்த 20 சவரன் நகையை பறிமுதல் செய்து, பின்னர் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version