அரியானா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்கிறார் மனோகர்லால் கட்டார்

அரியானா மாநில முதலமைச்சராக மனோகர்லால் கட்டார் மீண்டும் நாளை பதவியேற்க உள்ளார். ஜனநாயக ஜனதாக் கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. சண்டிகரில் நாளை பிற்பகல் நடைபெறும் நிகழ்ச்சியில் மனோகர்லால் கட்டார் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். ஜனநாயக ஜனதாக் கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அவர்களுக்கு ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Exit mobile version