மாநிலங்களவை எம்.பி.யாக மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட மன்மோகன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.யாக பதவி வகித்தார். சமீபத்தில் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, மீண்டும் அவரை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக மன்மோகன் சிங் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version