முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதென்றும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மன்மோகன் சிங் நன்றாக இருக்கிறார் என்றும், காய்ச்சல் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தற்போது மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் என்றும் மன்மோகன் சிங்கின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மன்மோகன் சிங் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். அதே போன்று அரவிந்த் கெஜ்ரிவால், அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமருக்காக ஒட்டு மொத்த இந்தியாவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version