மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

நெல்லை மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 7ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் மற்றும் பெருங்கால் பாசன நீரின் பயன்பாட்டாளர்கள் சங்கம் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று வரும் 7ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

கார் பருவ சாகுபடியை கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை 145 நாட்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை அடிப்படையாக கொண்டு 399 புள்ளி 60 கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 756 புள்ளி 62 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெரும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூலை பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

Exit mobile version