அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்றியே தீருவேன் – அமைச்சர் மணிகண்டன் சபதம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் உறுதிபடக் கூறியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜையை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவ கல்லூரியாக மாற்றாமல் விட மாட்டேன் என்று கூறினார்.

மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்துவதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 

 

Exit mobile version